மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

படகோட்டியின் போதனை!

ஓர் ஆற்றங்கரையில்,  படகோட்டியுடன் ஒரு படகு இருந்தது. அவ்வழியே ஒரு பண்டிதர் வந்தார். அவர் அக்கரைக்குச் செல்லவேண்டியிருந்தது. படகில் ஏறினார். பண்டிதர் சற்று கர்வம் மிகுந்தவர். அந்த ஆறு அகலமானது. படகோட்டி

News image
Updated On :14 மார்ச் 2020, 5:18 pm

எஸ்.திருமலை

ஓர் ஆற்றங்கரையில், படகோட்டியுடன் ஒரு படகு இருந்தது. அவ்வழியே ஒரு பண்டிதர் வந்தார். அவர் அக்கரைக்குச் செல்லவேண்டியிருந்தது. படகில் ஏறினார். பண்டிதர் சற்று கர்வம் மிகுந்தவர். அந்த ஆறு அகலமானது. படகோட்டி படகை அக்கரைக்குச் செலுத்த ஆரம்பித்தான்.

பண்டிதர் படகோட்டியைப் பார்த்து, ""உனக்கு நீதி சாஸ்திரம் பற்றி ஏதேனும் தெரியுமா??'' என்று கேட்டார்.

படகோட்டி, ""எனக்குத் தெரியாதுங்களே!'' என்றான்.

""இப்படி வாழ்க்கையின் பாதியை வீண் செய்து விட்டாயே,.... போகட்டும்!... புராணங்கள்?.....இதிகாசங்கள்?.... எதாவது படித்திருக்கிறாயா?''

""அதுக்கெல்லாம் எனக்கு ஏதுங்க நேரம்?...''

""வாழ்க்கையில் முக்கால் பகுதியை வீணாக்கி விட்டாயே.....வேதாந்தத் தத்துவங்கள் பற்றி ஏதாவது அறிந்திருக்கிறாயா?''

""எனக்குத் தெரிஞ்சதெல்லாம் இந்த ஆறு!.... என்னோட இந்த வேலை!.... அவ்வளவுதானுங்க....'' என்று பதில் சொன்னான் படகோட்டி.

பண்டிதர் அந்தப் படகோட்டியை ஒரு மூடன் என்று முடிவுக்கு வந்தார். படகு சென்றுகொண்டிருந்தது.

வெகுதூரத்தில் பெய்த பலத்த மழையால் ஆற்றில் திடீரென்று வெள்ளம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. ஆங்காங்கே நீர்ச் சுழல்கள்!.... படகு நிலை தடுமாறிச் சுழல ஆரம்பித்தது! பண்டிதருக்கு பயம் ஏற்பட்டது.

படகோட்டி பண்டிதரிடம், ""ஐயா உங்களுக்கு நீச்சல் தெரியுமா?'' என்று கேட்டான்.

பண்டிதரோ, ""தெரியாதே!.... ‘' என்றார்.

""ஐயா, நீங்க உங்க வாழ்நாளின் முழுப் பகுதியையும் வீணாக்கிட்டீங்க!.... நல்லகாலம்! என்னாலே உங்களைக் காப்பாத்த முடியும்!.... இந்தத் துண்டைக் கெட்டியாப் பிடிச்சுக்குங்க''.... என்று ஒரு துண்டை அவரிடம் தந்தான். அவரை இழுத்துத் தண்ணீரில் தள்ளினான். அவனிடம் இருந்த பெரிய துடுப்பைப் பிடித்துக் கொள்ளச் செய்தான். பிறகு நீந்திக்கொண்டே அவரையும் ஒருவழியாகக் காப்பாற்றினான். பண்டிதர் படகோட்டியைக் கையெடுத்துக் கும்பிட்டார்.

""என்னுடைய கல்வி என் உயிரை இப்போது காப்பாற்றவில்லை. ஆனால் நீ கற்றுக் கொண்ட நீச்சல் என்னைக் காப்பாற்றியது!.... என்னை மன்னிச்சுக்கோப்பா!'' என்றார் பண்டிதர்.

""அப்படியெல்லாம் சொல்லாதீங்க!..... நீங்க படிச்சவரு!''

""இல்லையப்பா!.... நீ கடவுள் மாதிரி என்னைக் காப்பாற்றினாய்!.... என் கர்வத்தையும் அடக்கினாய்!.... நீதான் எனக்கு குரு!''

என்று கூறினார் பண்டிதர். அவரது கர்வம் தண்ணீரில் கரைந்துவிட்டது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.