தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அஞ்சல் சேவை!

அஞ்சல் சேவை செய்பவர்கள் அயரா உழைப்பில் உயர்ந்தவர்கள்அஞ்சுகின்ற வெயில்தனிலும் 

News image
Updated On :16 மே 2020, 12:31 pm

கே.பி.பத்மநாபன்


அஞ்சல் சேவை செய்பவர்கள் 
அயரா உழைப்பில் உயர்ந்தவர்கள்
அஞ்சுகின்ற வெயில்தனிலும் 
அவர்தம் சேவை நிற்பதில்லை!

இடியும் மழையும் இருந்தாலென்?
இவர்தம் சேவை தொடர்ந்திடுமே!
கடிதில் கடிதம் சேர்ப்பதற்கு 
கடினமாகத் தாமுழைப்பார்

கடிதம் என்னும் இலக்கியத்தால் 
காசினியையே இணைத்திடுவர்!
படிப்போர்க்கெல்லாம் மகிழ்வூட்டும் 
பணிக்காய் நன்றாய் உழைத்திடுவார்!

உறவு நட்பு மனிதத்தை 
உணர்த்தும் கடிதப் பாலத்தை 
திறமையோடு கட்டுகிற 
தெய்வம் அஞ்சல்காரர்தான்!

அனைத்துத் தொடர்பாய் அலைபேசி 
அறிவுத் தொடர்பாய் வலைத்தளங்கள் 
அனைத்தும் இங்கே இருந்தாலென்?
அஞ்சல் அட்டை ஆனந்தம்!

கடிதம் எழுதும் பழக்கத்தை 
கண்டிப்பாகத் தொடர்ந்திடுவீர்!
மடியில் கணினி இருந்தாலும் 
மனதின் மகிழ்ச்சி கடிதம்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.