தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஆசானே அச்சாணி!

எண்ணும், எழுத்தும் கற்பிப்போர்இறவாப் புகழின் மாமனிதர்!கண்ணும், கருத்துமாயிந்தக் 

News image
Updated On :5 செப்டம்பர் 2020, 12:30 am

கே.பி.பத்மநாபன்


எண்ணும், எழுத்தும் கற்பிப்போர்
இறவாப் புகழின் மாமனிதர்!
கண்ணும், கருத்துமாயிந்தக் 
காசினிக்கே நலம் சேர்ப்பார்!

மண்ணில் மனித நேயமெனும் 
மரத்தின் வித்தை விதைத்திடுவார்!
கண்ணின் மணிபோல் கல்வியினைக் 
காத்துப் போற்றி வளர்த்திடுவார்!

நண்ணும் அறிவை நல்குதலில் 
நாட்டில் இவர் போல் யாருண்டு?
விண்ணும் கூட வசமாகும்
வீழ்ந்தே இவர்தம் தாள் பணிந்தால்!

உண்ணும் உணவைத் தரும் உழவர்
உலகம் சுழல அச்சாணி!
எண்ணும் எழுத்தும் தரும் ஆசான் 
என்றும் அறிவின் அச்சாணி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.