ரமேஷ்: நாங்க வெளியூர் போகனும்னு நெனச்சா.... கால் டாக்சி புக்பண்ணுவோம்... நீங்க...?
சோமு: நாங்க முழு டாக்சியையும் புக் பண்ணிடுவோன்டா.
மு.சம்சுகனி,
தூத்துக்குடி-628 001.
ஏங்க பையனைத் திட்டுறீங்க...?
சென்னை வெள்ளத்துக்குப் படகு
விடறாங்களே... பெண்களுக்குக் காசு வாங்குவாங்களா... இல்ல இலவசமான்னு கேட்கறான்.
அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.
"" என்னை எல்லோரும் இங்கிலீஷ்ல "புலி'ன்னு சொல்வாங்கடா...''
""அதெப்படிடா... இங்கிலீஷ்ல "டைகர்'னுதானே சொல்லணும்...''
ஆர்.சுந்தர்ராஜன்,
சிதம்பரம் - 608 001.
ஏன்டா ஸ்கூலுக்கு லேட்?
ரோட்ல புதுசா போர்டு ஒன்னு வெச்சிருந்தாங்க சார்...
என்ன போர்டு?
அருகில் பள்ளிக்கூடம் மெதுவாகச் செல்லவும்-ன்னு எழுதியிருந்துது சார்... அதான் மெதுவா வந்தேன்.
உ.அப்துல் ஹாதி,
கடையநல்லூர்.
மாணவர்களே! நிறைய புத்தகங்களைப் படிச்சு அறிவை நாம பெருக்கணும்.
எத்தனையால பெருக்கணும் சார்?
எஸ்.சடையப்பன்,
திண்டுக்கல்.
ஏன்டா என்னோட பர்சை அவனிடம் கொடுத்தே?
நீதானே இது "மணிபர்சு'ன்னு சொன்னே.... அதான் மணிகிட்ட கொடுத்தேன்.
சீனி.செந்தில்குமார்,
தேனி