டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நன்றி மறவாதே!

மேற்குத் தொடர்ச்சி மலையோரம்மிகவும் இயற்கை எழிலோடு

News image
Updated On :4 டிசம்பர் 2021, 12:30 am

தளவை இளங்குமரன்


மேற்குத் தொடர்ச்சி மலையோரம்
மிகவும் இயற்கை எழிலோடு
ஆற்றங் கரைக்கு அருகாக
அமைந்தது தளவாய் புரமாகும்!

கற்றோர் மிகவும் குறைவான
காட்டு ஓரத்துக் கிராமத்தில்
பெற்றோர் கூலி வேலைக்கே
பெரிதும் சென்று வருவார்கள்!

பள்ளிக் கல்வி பயிலாத
பரம ஏழைக் குடும்பத்தில்
பிள்ளைச் செல்வ மகளாகப்
பிறந்து வளர்ந்தாள் அலமேலு!

சுட்டிப் பெண்ணாள் குடிசைக்குள்
சும்மா இருக்கப் பிடிக்காமல்
குட்டி ஆடுகள் சிலவற்றைக்
கொண்டு மேய்த்துத் தினம்வந்தாள்!

ஆட்டை ஓட்டிக் காட்டுக்கு
அவளும் போகும் போதெல்லாம்
வீட்டு நாயும் தவறாமல்
விடாது கூடச் சென்றுவரும்!

ஒருநாள் சிறுத்தைப் புலியொன்று
உருமிக் கொண்டு திடுமென்று
அருகாய்ப் பாய்ந்து வரக்கண்டு
ஆடுகள் பறந்தன திசைக் கொன்று!

ஆட்டைத் தூக்க வந்தபுலி
அதனைத் துரத்த நாய்செல்ல 
காட்டுப் புலிதன் வாயிலதைக்
கவ்விச் சென்றது வனத்துக்குள்!

உண்ட நன்றிக் கடன்தீர
உயிரை நாயும் ஈந்ததுபோல்
மண்ணில் நன்றி மறவாமல்
மனிதர் நாமும் வாழ்ந்திடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.