92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஏசு வார்த்தை இனியது!

"ஒருகன் னத்தில் அறைப வர்க்கு மறுகன் னத்தைக் காட்டென்று' பெருமைக் குரிய ஏசு நாதர் நமக்குச் சொன்னார் அறிவுரை

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

அழகு இராமானுஜன்

"ஒருகன் னத்தில் அறைப வர்க்கு 
மறுகன் னத்தைக் காட்டென்று' 
பெருமைக் குரிய ஏசு நாதர் 
நமக்குச் சொன்னார் அறிவுரை

"இன்னா தனவே செய்யும் பேர்க்கும் 
இனிய உதவி செய்யென்று' 
செந்நாப் போதார் வள்ளு வர்தாம் 
செப்பி யுள்ளார் குறளுரை

அவற்றைச் சற்றே நினைவில் கொண்டு
அவனி அமைதி காணவே 
தவறு புரிவோர் நமது மனித 
உறவோர் என்னும் உணர்வொடு

குறைகள் திருத்தி நிறைகள் பெருக்கி
கூடி வாழ்ந்து மகிழுவோம் 
பொறையை மிஞ்சி மனித ஒருமை 
பேணும் சக்தி வேறுண்டோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.