5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

கடி

ஒரு கிலோவுக்கு எத்தனை கிராம்?மாணவன்: ரேஷன்லயா? மற்ற கடைகள்லயா மிஸ்...?

News image
Updated On :27 நவம்பர் 2021, 5:52 pm IST


ஒருவன்: புக்கை கிழிக்கத்தானே முடியும்...  அந்தக் கோபு  "அண்ணன் உடைச்சிட்டான் இனிமே புக் பார்க்க முடியாது'ன்னு அழுவுறானே... ஏன்? 
மற்றவன்:  அதுவா? அவன் பார்த்தது ஃபேஸ்புக்.  உடைந்தது அவன் 
அண்ணனோட செல் ஃபோன்.

நாஞ்சில் சு. நாகராஜன் 
கன்னியாகுமரி மாவட்டம்.

பெரியவர்:  ""உன் பேரு என்ன பாப்பா?''
சிறுமி:  ""காவேரி''
பெரியவர்: ""ஸ்வீட் நேம்...''
சிறுமி:  ""ஸ்வீட் நேம் இல்ல தாத்தா... 
ரிவர் நேம்''

கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்-605 602.

ஆசிரியை:  ஒரு கிலோவுக்கு எத்தனை கிராம்?
மாணவன்: ரேஷன்லயா? மற்ற கடைகள்லயா மிஸ்...?

வி.ரேவதி,
தஞ்சை.

அம்மா: கடைக்குப் போய் அப்பளப்பூ வாங்கிட்டு வாடா..''
மகன்: ""எத்தனை முழம் வாங்கணும்?''

ஏ. நாகராஜன்,
பம்மல்.

ராமு:  நான் "மண்டே' பிறந்தேன். 
நீ எப்படா பிறந்தே?
தினேஷ்: நான் "சண்டே' பிறந்தேன்.
ராமு: டூப் விடாதடா... அன்னிக்கு "லீவு' நாள்!

ஆர். சுந்தரராஜன்,
சிதம்பரம்.

ரசிகா: நம்ம டீச்சருக்கு என்னடி ஆச்சு?
ராகிணி:  ஏன்டி அப்படி கேக்குற...?
ரசிகா:  பாரேன்... போர்டுல திருக்குறளை அவங்களே எழுதிட்டு, இதை எழுதியது யாருன்னு நம்மைப் பார்த்துக் கேட்கறாங்க...
ராகிணி: ? ? ? ? ?

ஜோ. ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.