மெய்யுணர்தல்
அறத்துப்பால் - அதிகாரம் 36 - பாடல் 8
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
அறியாமை என்னும் மயக்கத்தில்
ஆசை பற்று வளருது
மயக்கமான எண்ணத்தில்
மனம் போல் வாழத் தூண்டுது.
பிறப்பு என்னும் பேதைமை
நீங்க வேண்டும் என்று சொன்னால்
சிறப்பு என்னும் மெய்ப்பொருள்
உணர்ந்து வாழ்வது நல்லறிவு.