அறத்துப்பால் - அதிகாரம் 30 - பாடல் 8
புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
உடலைச் சுத்தம் செய்திட
நீரில் குளிக்க வேண்டுமே
மனத்தை சுத்தம் செய்திட
வாய்மை காக்க வேண்டுமே!
மாசில்லாத மனத்திலே
நல்ல சொற்கள் தோன்றிடும்
தூய்மையான நெஞ்சினை
வாய்மை நன்கு விளக்கிடும்.