""எங்க கம்ப்யூட்டர் மவுசே இல்லாமகூட வேலை செய்யும் தெரியுமாடா..?''
""அப்ப... மவுசுக்கு மவுசு போயிடுச்சுன்னு சொல்லு''
கோ.இனியா,
கிருஷ்ணகிரி.
""சின்ன பசங்க வெற்றிலை பாக்கு போட்டா கோழி முட்டும்டா பேராண்டி...''
""பரவாயில்லை தாத்தா... அந்தக் கோழியை நம்ம வீட்டு மாடை விட்டு கொத்த விட்டுருவோம்...''
ச.அரசமதி,
தேனி.
""எனக்கு ஏம்பா "மந்திரமூர்த்தி'ன்னு பேரு வெச்சீங்க...?''
""ஏன்... என்னாச்சு...?''
""எல்லோரும் என்னை "மந்தி'ன்னு கூப்பிடறாங்க...''
ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்.
""ஏன்டா... "லோ லோ'ன்னு அலைஞ்சேன்னு சொல்றதுக்கு பதிலா "ஹை ஹை'ன்னு அலைஞ்சேன்னு சொல்றியே...!!''
""நான் அலைஞ்சது உயரனமான பகுதியாச்சே...''
சி.ரகுபதி,
போளூர்606 823.
""வானவில்லின் நிறங்களை வரிசைப்படுத்தி எழுதச் சொன்னா... நீ ஏன் எதுவுமே எழுதாம இருக்கே...?''
""நான் பார்க்கும்போது வானவில் மறைஞ்சு போயிடுச்சு சார்...''
சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.
""ஏய்... ஜுலி செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன ஒற்றுமை... சொல்லு பாக்கலாம்...''
""செல்போன்ல பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது. மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலன்ஸ் பண்ண முடியாது... ஹி.. ஹி...''
ஆ.சுகந்தன்,
தருமபுரி 635202.