/

பனித்துளியே

பச்சைப் புல்லின் நுனிமேலே    படிந்து கிடக்கும் பனித்துளியேமெச்சும் உழவன் தலைப்பாகை    போல நீதான் தெரிகின்றாய்!

News image
Updated On :24 ஜூலை 2022, 6:00 am IST

பச்சைப் புல்லின் நுனிமேலே
    படிந்து கிடக்கும் பனித்துளியே
மெச்சும் உழவன் தலைப்பாகை
    போல நீதான் தெரிகின்றாய்!

விரிந்த பரந்த காட்சியினை
    சுருக்கிக் காட்டும் கண்ணாடி
அருகில் நிற்கும் பனைமரமும்
    அடங்கி உன்னுள் கிடக்கிறதே!

சோலைச் செடியின் அரும்பைப்போல்
    காலை வேளை பிறக்கின்றாய்
வேலை முடிந்த பூவைப்போல்
    மாலை அழிந்து மறைகின்றாய்!

நீண்டு மறைந்த சூரியனும்
    நாளும் கிழக்கே வருவதுபோல்
மீண்டும் காலை தோன்றுகிறாய்
    பிறப்பு வட்டம் காட்டுகிறாய்!

பலரும் போற்றும் முத்துப்போல்
    பெருமை அழகு தெரிகிறது
தொலைந்து விட்ட சில்லறைபோல்
    உனது உருவம் மறைகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.