பச்சைப் புல்லின் நுனிமேலே
படிந்து கிடக்கும் பனித்துளியே
மெச்சும் உழவன் தலைப்பாகை
போல நீதான் தெரிகின்றாய்!
விரிந்த பரந்த காட்சியினை
சுருக்கிக் காட்டும் கண்ணாடி
அருகில் நிற்கும் பனைமரமும்
அடங்கி உன்னுள் கிடக்கிறதே!
சோலைச் செடியின் அரும்பைப்போல்
காலை வேளை பிறக்கின்றாய்
வேலை முடிந்த பூவைப்போல்
மாலை அழிந்து மறைகின்றாய்!
நீண்டு மறைந்த சூரியனும்
நாளும் கிழக்கே வருவதுபோல்
மீண்டும் காலை தோன்றுகிறாய்
பிறப்பு வட்டம் காட்டுகிறாய்!
பலரும் போற்றும் முத்துப்போல்
பெருமை அழகு தெரிகிறது
தொலைந்து விட்ட சில்லறைபோல்
உனது உருவம் மறைகிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் பலத்த காயம்

அஞ்சல் வாக்குகள் சேகரிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


