அன்புதான் அகில உலகம்
அனைத்தையும் ஆளும் சக்தி!
அன்புதான் அனைவர் உளமும்
அணைத்துயிர் வாழும் சக்தி!
அன்புதான் ஆசை, கோபம்,
அகந்தையை அடக்கும் சக்தி!
அன்புதான் பாசம், நேசம்
அகத்தினில் படைக்கும் சக்தி!
அன்புதான் அமைதி, பொறுமை,
அகிம்சையை அளிக்கும் சக்தி!
அன்புதான் வலிமை, உறுதி,
அறநெறி வளர்க்கும் சக்தி!
அன்புதான் இறைக்கும் கிணறாய்
அரும்புனல் சுரக்கும் சக்தி!
அன்புதான் இரக்கம், கருணை
அறிந்ததைப் பெருக்கும் சக்தி!
அன்புதான் கவலை, துயரம்
அடைவதைத் தடுக்கும் சக்தி!
அன்புதான் பிறரின் சுமையை
அகற்றக்கை கொடுக்கும் சக்தி!
அன்புதான் துன்பக் கடலின்
அலைகளைக் கடக்கும் சக்தி!
அன்புதான் இன்பக் கரையை
அடைத்திடக் கிடைக்கும் சக்தி!