பார்!

பார்!

கொஞ்சு மழலையின் கொவ்வைக் கனியிதழ்க்
    கொட்டுஞ் சிரிப்பினைப் பார்- அது
பிஞ்சு விரல்களால் நெய்யுடைச் சோற்றினைப்
    பிசைந்து உதிர்ப்பதும் பார்!

தவழ்ந்தும் விழுந்தும் எழுந்தும் வருஞ்சிறு
    தளிருடல் குழந்தையைப் பார்- நெஞ்சங்
கவர்ந்து நமையது மகிழ்ச்சியின் உச்சியில்
    களிப்புறச் செய்வதும் பார்!

தத்தித் தளர்நடை யிட்டு வருகையில்
    தவறி விழுவதும் பார்- அது
தொத்துங் கிளியென அன்னையின் தோள்களில்
    தூங்கிக் கிடப்பதும் பார்!

"அம்மா" எனமிகு அன்புடன் தாயினை
    அழைத்துச் சிணுங்குதல் பார்- அட
இம்மாநிலத்தினில் குழந்தைக்கு வேறோர்
    ஈடுண்டு என்பவர் யார்?
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com