உலகிலேயே மிக அதிக எல்லை நாடுகளைக் கொண்ட நாடு சீனா. அவையாவன:கஜகிஸ்தான், ரஷ்யா, கைரஜிஸ்தான், தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம்,பூடான், மியான்மர், லாவேரஸ், வியத்நாம், வடகொரியா, மங்கோலியா ஆகிய 14 நாடுகள்தான்.
உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் திருட்டு போகும் நாடு- நெதர்லாந்து. ஆம்ஸ்டர்படம் நகரில் மட்டும் 8 லட்சத்துக்கு 81 ஆயிரம் சைக்கிள்கள் உள்ளதாகப் புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில்தான் சைக்கிள்கள் அதிகம், அந்த மாநிலத்தில் 78.9 சதவீத வீடுகளில் சைக்கிள்கள் உள்ளன.
மலைக்கள்ளன் படத்துக்கு அதே பெயரில் வந்த நாவல் தான் காரணம். அந்த நாவலை உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று சிறையில் இருந்தபோது, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை எழுதினார்.
திரைப்படத் துறையினரைத் தவிர்த்து, முன்னாள் முதல்வர் காமராஜருக்காக 'ராஜபார்ட் ரங்கதுரை - என்ற படம் சிறப்புக் காட்சி முதன்முறையாகத் திரையிடப்பட்டது.
- ராஜி ராதா
வயதான கழுகு தன்னுடைய ஒரு பக்கத்தில் ஒரு இறக்கையை உதிர்த்தால் இன்னொரு பக்கத்திலும் ஒரு இறக்கையை உதிர்க்கும். ஏனெனில், இரு பக்கங்களிலும் 'பேலன்ஸ்- செய்து பறக்க வசதியாகவே இருக்கும் அல்லவா?
அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள ஓர் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா வித்தியாசமாகவே இருந்தது. இதில், பட்டம் பெற்றவர்களில் 12 இரட்டையர்கள், ஒரு மூவர் அடங்குவர்.
உலகப் புகழ் பெற்ற ஐ.பி.எம். கணினி நிறுவனத்தில் பணிபுரிந்த ஒருவர் 15 ஆண்டாகத் தனக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். 2008- ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்ததில் இருந்தே மருத்துவ விடுப்பில் இருந்திருக்கிறார். அதனால், 2013- இல் இவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. ஓய்வு அளிக்கப்பட்டாலும், தனக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று வாதாடுகிறார். இது எப்படி இருக்கு?
இன்று பிரபலமாகியிருக்கும் 'ஸ்டாண்ட் அப்- காமெடி 15- ஆவது நூற்றாண்டிலேயே இருந்திருக்கிறது. அப்போதே அரசர்களையும் அமைச்சர்களையும் கேலி செய்து காமெடி அரங்கேறியதற்கான ஆதாரத்தை கேம்பிரிட்ஜ் பல்கலை. பேராசிரியர் ஜேம்ஸ் வேடு என்பவர் வெளியிட்டிருக்கிறார்.