மாணவர்கள் காட்டிய மரியாதை

குடியரசு முன்னாள் தலைவர்  டாக்டர் ராதாகிருஷ்ணன் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
மாணவர்கள் காட்டிய மரியாதை

குடியரசு முன்னாள் தலைவர்  டாக்டர் ராதாகிருஷ்ணன் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது பணியிட மாறுதல் கிடைத்து, வேறொரு ஊருக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

இவர் மீது மாணவர்களுக்கு அளப்பரிய அன்பும் மரியாதையும் உண்டு. அவரைப் பிரிய மனமில்லை. இருப்பினும், அரசு உத்தரவு என்பதால், வழியனுப்பி வைத்தனர். 

அப்படி வழியனுப்பியபோது, அவரை "சாரட்' வண்டியில் உட்கார வைத்து, குதிரைக்குப் பதிலாக மாணவர்களே வண்டியை இழுத்துச் சென்றனர்.

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இருந்து பெங்களூரு ரயில் நிலையம் வரை முக்கிய சாலைகளின் வழியாக 10 கி.மீ. தூரம் மாணவர்களே சாரட் வண்டியை இழுத்துச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com