திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

எவ்வாறு வாழவேண்டும்..!

மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல் வாயிலாக, கூறுவது என்ன தெரியுமா?

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 5:37 pm IST

மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல் வாயிலாக, கூறுவது என்ன தெரியுமா?

ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே- நீ

ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே!

நாட்டின் நெறிதவறி நடந்துவிடாதே- நம்

நல்லவர்கள் தூங்கும்படி வளர்ந்து விடாதே!

மூத்தோர்சொல் வார்த்தைகளை மீறக் கூடாது- பண்பு

முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது!

மாற்றார் கைப் பொருளை நம்பி வாழக் கூடாது- தன்

மாமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது!

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேண்டும்

வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேண்டும்- அறிவு

வளர்ச்சியாகவே வான்முகட்டைத் தொடவேணும்

வெற்றி மேல் வெற்றி வர விருதுவர பெருமைவர

மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேணும்

பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்

வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேண்டும்

-தகவல்- தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.