கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எவ்வாறு வாழவேண்டும்..!

மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல் வாயிலாக, கூறுவது என்ன தெரியுமா?

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 11:12 am

DIN

மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பது குறித்து, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தனது பாடல் வாயிலாக, கூறுவது என்ன தெரியுமா?

ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே- நீ

ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே!

நாட்டின் நெறிதவறி நடந்துவிடாதே- நம்

நல்லவர்கள் தூங்கும்படி வளர்ந்து விடாதே!

மூத்தோர்சொல் வார்த்தைகளை மீறக் கூடாது- பண்பு

முறைகளிலும் மொழிதனிலும் மாறக் கூடாது!

மாற்றார் கைப் பொருளை நம்பி வாழக் கூடாது- தன்

மாமில்லாக் கோழையுடன் சேரக் கூடாது!

துன்பத்தை வெல்லும் கல்வி கற்றிட வேண்டும்

வம்பு செய்யும் குணமிருந்தால் விட்டிட வேண்டும்- அறிவு

வளர்ச்சியாகவே வான்முகட்டைத் தொடவேணும்

வெற்றி மேல் வெற்றி வர விருதுவர பெருமைவர

மேதைகள் சொன்னதுபோல் விளங்கிட வேணும்

பெற்ற தாயின் புகழும் நீ பிறந்த மண்ணின் புகழும்

வற்றாமல் உன்னோடு வளர்ந்திட வேண்டும்

-தகவல்- தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.