செயலில் வீரம் காட்டிடு
செயற்கு அரியதைச் செய்திடு!
உயர்வை நோக்கி ஓடிடு
உண்மையைப் பேசி உயர்ந்திடு!
கடமையைக் கண்ணாய்க் கருதிடு
கனவை நனவாய் ஆக்கிடு!
மடமையை ஒழிக்க முயன்றிடு!
மனித மாண்பைப் போற்றிடு!
கரும வீரனாய் ஒளிர்ந்திடு
கண்ணியம் காத்து ஓங்கிடு!
பெருமித வாழ்வை வாழ்ந்திடு!
பெரிய புகழை அடைந்திடு!