சிட்டு சிட்டுக்குருவியே
சின்னஞ்சிறிய குருவியே
வட்ட மிட்டு வானிலே
வந்து தரையில் அமர்கிறாய்!
கொட்டிக் கிடக்கும் உணவினைக்
கொத்தித் தின்னும் அழகினை
எட்டி எட்டிப் பார்ப்பதால்
எங்கள் உள்ளம் துள்ளுதாம்!
பட்டுப் போன்ற உடலையும்
பார்க்கும் கண்கள் அலகையும்
தொட்டுப் பார்க்க ஆசைதான்
தோழன் போன்று அருகில்வா!
சுற்றுச்சூழல் கேட்டினால், உன்
சுற்றம் குறைந்து வருவதாய்
மற்றோர் சொல்வார். எங்களை
மதித்து வந்தால் காக்கிறோம்.
-அ.கருப்பையா, பொன்னமராவதி.