திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் 42,194 ஆகும். தமிழில் உள்ள 247 எழுத்துகளில் 37 தமிழ் எழுத்துகள் இடம்பெறவில்லை. தமிழ், கடவுள் ஆகிய இரு சொற்கள் திருக்குறளில் இடம்பெறவில்லை. திருக்குறள் உரையாசிரியர்களில் பத்தாவது உரையாசிரியர் பரிமேலழர். 'கோடி' என்ற சொல் 7 இடங்களில் இடம்பெற்றுள்ளன. 'எழுபது கோடி' என்ற சொல் ஒரேயொரு குறளில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. 'ஏழு' என்ற சொல் 8 குறள்களில் எழுதப்பட்டுள்ளது. இடம்பெறாத எண்- 9.
-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.
திருக்குறள் முதன்முதலில் 1812-இல் அச்சிடப்பட்டது. முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசம். முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.
'ஒள' என்ற உயிர்எழுத்து பயன்படுத்தப்படவில்லை. 'னி' என்ற எழுத்து 1,705 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. 'ங', 'ளீ' என்ற எழுத்துகள் ஒரேமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன. 'நெருஞ்சி' என்ற பழம் ஒருமுறையும், 'குன்றிமணி' என்ற விதை ஒருமுறையும் இடம்பெற்றுள்ளன. அனிச்சம், குவளை மலர்களும், பனை, மூங்கில் மரங்களும், இடம்பெற்றுள்ளன.
-முக்கிமலை நஞ்சன்
திருக்குறளில் கடவுள் என்ற சொல் இடம்பெறாமல், தெய்வம் என்ற சொல்லே இடம்பெற்றுள்ளது. '
-ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திரைப்படத் திறனாய்வுக்கு அறந்தை!

‘வாழ்வில் உயர திருக்குறளைப் படிப்பது அவசியம்’

அம்பையில் திருக்குறள் அறக்கட்டளைக் குழு விழா

தெரியுமா?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


