பின்விளைவுகள்...

இதயம் நிறைய அன்பிருந்தால் இன்சொல் தானே வெளிவருமே!
பின்விளைவுகள்...
Published on
Updated on
1 min read

இதயம் நிறைய அன்பிருந்தால்

இன்சொல் தானே வெளிவருமே!

விதையின் உள்ளே உயிர்ப்பித்திருந்தால்

முளைத்து நலமாய் வளர்ந்திடுமே!

காம்பில் ரோஜா அரும்பிருந்தால்

காலை வேளை பூத்திடுமே!

கூம்பிக் குமுத- மொட்டிருந்தால்

குளிரும் இரவில் விரிந்துடுமே!

பசுவின் கன்று அருகிருந்தால்

பால்தான் மடியில் சுரந்திடுமே!

இசைந்த பாட்டைக் கேட்டதுமே

இன்பத் தலையும் அசைந்தாடும்!

காகம் உண்ணச் சோறிட்டால்

கரைந்து கூட்டம் சேர்ந்திடுமே!

மேகம் கருத்து மின்னலிட்டால்

மழையும் பின்பு பொழிந்திடுமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com