இதயம் நிறைய அன்பிருந்தால்
இன்சொல் தானே வெளிவருமே!
விதையின் உள்ளே உயிர்ப்பித்திருந்தால்
முளைத்து நலமாய் வளர்ந்திடுமே!
காம்பில் ரோஜா அரும்பிருந்தால்
காலை வேளை பூத்திடுமே!
கூம்பிக் குமுத- மொட்டிருந்தால்
குளிரும் இரவில் விரிந்துடுமே!
பசுவின் கன்று அருகிருந்தால்
பால்தான் மடியில் சுரந்திடுமே!
இசைந்த பாட்டைக் கேட்டதுமே
இன்பத் தலையும் அசைந்தாடும்!
காகம் உண்ணச் சோறிட்டால்
கரைந்து கூட்டம் சேர்ந்திடுமே!
மேகம் கருத்து மின்னலிட்டால்
மழையும் பின்பு பொழிந்திடுமே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இதயம் முரளி ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

குஜராத்: வந்தே பாரத்தில் வந்த இதயம்!

உடைந்த இதயம் நம்பிக்கையால் சரிசெய்யப்பட்டுள்ளது... ஆலியா பட் ஆதரவு!

சிரி... சிரி...
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp


