

தப்பு தவறுகள் இல்லாமல்,
தாங்கும் கல்வியை எழுதி, படி;
தப்பு தவறுடன் எழுதுவதால்
பொருளில் குற்றம் வந்துவிடும்!
'நீறு' என்றே எழுதுகையில்
நெற்றியில் 'திருநீறு' என்பதுதான்,
'நீர்' என்றே எழுதிப் பார்;
குடிக்கும் நீரைக் கொண்டுவரும்!
'சிகப்பு' என்று எழுதாதே;
சொற்பொருள் பிழையைக் கொண்டுவரும்;
'சிவப்பு' என்று எழுதிப் பார்
சரியாய் 'வண்ணம்' அது குறிக்கும்!
'விபரம்' என்பதும் பெரும் தவறு;
'விவரம்' என்பதே விவரிக்கும்
'சுவரில்' என்றே எழுதுவது,
சொந்த அறிவை அழகாக்கும்!
'சுவற்றில்' என்று எழுதுவது
சிந்தனை இல்லா செயலாகும்!
'புத்தகம்' என்பது புதுவீடாகும்;
பொத்திமூடி, பொத்தி, திறப்பதால்;
பொத்தகம் என்பதே சரியாகும்,
புரிந்து படிநீ புலமை வரும்!
இத்தனை விளக்கமும் மனதில் கொள்,
மறதி வராமல் கற்றுக் கொள்;
பத்துத் தலைமுறைப் புகழ் கிடைக்கும்;
பைந்தமிழ் உனக்கு வாழ்த்துரைக்கும்!
-பொன்னியின் செல்வன், தஞ்சாவூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
முதல் நாவல் ஆசிரியை...

எல்லோரும் புத்தகம் எழுத வேண்டும்

கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

தாய்மொழி என்றே சொல்லிடடா ...
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

