இவரைச் சென்னைக்கு அழைத்து வந்து, ரோடரி கிளப் -எஸ்பிளனேட் விருது கொடுத்து, சென்ற வாரம் கெüரவித்தது. இதன் தலைவர் கே.கோவிந்தராஜன் தற்செயலாக ஒரு பத்திரிகையில் "பயிர்' அறக்கட்டளைப் பணிகளைப் பற்றிப் படித்தாராம். தன் ரோட்டரி நண்பர்களையும் அழைத்துக் கொண்டு நேரே தேனூர் போய்ப் பார்த்தாராம். ""எங்களில் பலருக்கு கிராமங்கள் எப்படி இருக்கும் என்றே தெரியாது!'' என்று உண்மையை ஒப்புக் கொண்டார் கோவிந்தராஜன். நம்மால் இப்படி எல்லாம் பிரமாதமாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும் உற்சாகமாகப் பணி செய்பவர்களை ஊக்குவிக்கலாமே என்று தோன்றிற்றாம். அழைத்தார் செந்தில்குமாரை சென்னைக்கு. அக்டோபர் 31 அன்று கன்னிமாரா ஓட்டலில், "பிடியுங்கள் விருதை!' என்று கொடுத்துவிட்டார். சுற்றுலாச் செயலர் இறையன்பு, செந்தில்குமாரின் காந்திய வழிமுறையைப் பெரிதும் பாராட்டினார்.