காந்தியடிகள் ஒரு முறை கோவைக்கு வருகை தந்தார். அப்போது கோவையில் டாக்டர் சர்.ஆர்.கே. சண்முகம் இல்லத்தில் தங்கினார். ஒரு நாள் காந்திஜியின் நிழற்படம் ஒன்றை அவரிடம் எடுத்துக்கொண்டு போய் அதன் அடியில் கையெழுத்துப் போடும்படி ஆர்.கே.எஸ். கேட்டுக் கொண்டார். காந்தியடிகள் ""என்னுடைய கையெழுத்தை இந்தப் புகைப்படத்தில் இட வேண்டுமானால் அதற்குச் சரியான விலையைக் கொடுக்கத் தாங்கள் தயாரா?'' என்று கேட்டார். ""விலை கொடுக்கத் தயார்; எவ்வளவு தொகை கேட்கிறீர்கள்?'' என்றார் ஆர்.கே.எஸ். ""பணம் எதுவும் வேண்டாம்; நான் கேட்கும் ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால் போதும்'' என்றார் அடிகள். ""நாள்தோறும் அரைமணி நேரத்திற்கு குறையாமல், கைராட்டையால் நூல் நூற்பதாக வாக்குறுதி தர வேண்டும்'' என்றார் மகாத்மா. ஆர்,கே.எஸ். சற்றே சிந்தித்துவிட்டு,""இது என்னால் இயலாத காரியம். என்னை மன்னியுங்கள்'' என்றார். காந்திஜி புன்னகையுடன்,""தங்கள் உண்மையை நான் பாராட்டுகிறேன். வாக்கு கொடுத்துவிட்டு தவறுவதைவிட இயலாமையை ஒப்புக்கொண்டதே மேல்'' என்றார். ""நான் உண்மையைப் பேசினதை விலையாக வைத்துக்கொண்டு கையொப்பம் இட்டுக் கொடுக்கக்கூடாதா?'' என்றார். அடிகள் நகைத்துக்கொண்டே,""நான் ஒரு பனியா! (வணிகன்) நீங்களும் ஒரு பனியாதான். வணிகத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்'' என்று கூறி கையெழுத்திட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!

தேர்தலைப் புறக்கணித்த வேங்கைவயல் மக்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


