போலீஸ்காரர் அழகிரியாக பால்ராஜின் நடிப்பில் ஆவேசம் இருந்தது. தாலி கட்டிய கணவரா, கிராமத்துக்குத் தண்ணீர் கொண்டுவந்த வெள்ளச்சாமியா என்ற காட்சியில் செவந்தியின் படபடப்பான வசனத்தோடு சேர்ந்த ஆவேசம், நாடக முடிவை உணர்ச்சிக் கொந்தளிப்பாக மாற்றிவிட்டது. ஸ்வேதா சீனிவாசனுக்குள் சாது செவந்தியும் இருந்தாள், ஆவேச செவந்தியும் இருந்தாள். பொறுமையற்ற இளைஞன் கோவாலுவாக சூரஜ் வெடித்து எழும் எல்லாக் காட்சிகளிலுமே, "நாடக மேடைக்கு சமீபத்தில் கிடைத்த இந்த இளைஞரின் வரவு நல்வரவாகுக' என்று சொல்ல வைத்தது. கந்தையன் (அருண் பிரகாஷ்), குருசாமி (ரவி ஆனந்த்), பூசா (கார்த்திக்), குப்பண்ண ஆசா (எம்.எஸ்.கணேஷ்) எல்லாருமே தங்கள் பாத்திரத்தை உணர்ந்து பங்கு கொண்டிருக்கிறார்கள்.