சென்ற பௌர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் போன போது, மாலை ஏழுமணிக்குத் தொடங்கி, இரவு பன்னிரண்டரை மணிக்கு ஹோட்டல் அறையை அடைந்தேன். இத்தனை லட்சக்கணக்கான மக்கள் மலையைச் சுற்றி வருவது வியப்பைத் தந்தது. குழந்தைகள், பெண்கள், அயல்நாட்டவர்கள், நம்முடனே தொடர்ந்து நடந்துவந்ததும், அதில் இருந்த ஒழுங்கும், வழியெங்கும் இருந்த கோயில்களில் சூடம் ஏற்றி வணங்குவதும், கடைகளில் வியாபாரம் சுறுசுறுப்பாக அந்த இரவு மட்டும் நடைபெறுவதைப் பார்ப்பதும் மிக வித்தியாசமான காட்சிகளாக இருந்தன. யாரும் தொலைந்து போகவில்லை. யாரும் மிதிபடவில்லை. எவருக்கும் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.