கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

நான்கு பேர் பேயிடம் சிக்கும் கதை

'தனி ஒருவன்', "வழக்கு எண் 18/9", "ஒரு குப்பைக் கதை' உள்ளிட்ட பல படங்களின் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா

News image
Updated On :27 மே 2019, 10:29 am IST

'தனி ஒருவன்', "வழக்கு எண் 18/9", "ஒரு குப்பைக் கதை' உள்ளிட்ட பல படங்களின் படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா. இவர் தற்போது தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். இவர் தொடங்கியுள்ள புது நிறுவனம் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. முதல் தயாரிப்பாக "நாயே பேயே' என்ற பெயரில் படம் உருவாகி வருகிறது. கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது. "ஒரு குப்பைக் கதை' படத்தில் நடித்த நடன இயக்குநர் தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா கதாநாயகியாக நடிக்கிறார். "ஆடுகளம்' முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, நிரன் சந்தர். இசை, என்.ஆர்.ரகுநந்தன். இயக்கம், சக்தி வாசன். ஒரு நாயை கடத்த முயற்சிக்கும் நான்கு பேர், தவறுதலாக பேயை கடத்துகின்றனர். பிறகு பேயிடம் சிக்கி தவிக்கும் அவர்களின் கதி என்ன என்பதை நகைச்சுவையாக சொல்லுவதே கதை. சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.