எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் "வலிமை' படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறைக்குப் பிந்தைய பணிகளுக்கு அரசு தரப்பில் அனுமதி கொடுக்கப்பட்டு டப்பிங், எடிட்டிங் ,கிராபிக்ஸ் உள்ளிட்ட பணிகள் தொடங்கி இருக்கக்கூடிய சூழ்நிலையில் விரைவில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "வலிமை' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 72 நாட்கள் மீதமிருக்கும் சூழ்நிலையில் படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்த உடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டால் தான் திட்டமிட்டபடி தீபாவளிஅல்லது 2021 பொங்கல் அன்று திரைக்கு வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையில் படக்குழு படப்பிடிப்பு தொடங்க அனுமதி எப்போது கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நடிகர் அஜித் தரப்பிலோ படப்பிடிப்பை பொறுமையாகத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளி வந்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் கரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருவதால் "வலிமை' படத்தின் படப்பிடிப்பை பொறுமையாகவே தொடங்கிக் கொள்ளலாம் என்று அஜித் கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முக்கூடலில் குண்டுக் கல் ஏற்றிய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்! - பிரேமலதா விஜயகாந்த்

சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி செய்தது பச்சை துரோகம்! - மு. தமிமுன் அன்சாரி

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியினா் 4 போ் மீது வழக்கு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

