தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

டும்டும்டும்: 35 ஆண்டுகள் காத்திருப்பு!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், அப்படி நிச்சயிக்கப்பட்ட  திருமணங்கள் நடக்க   பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய  நிலைமை பலருக்கும்  ஏற்படுகிறது.

News image
Updated On :11 டிசம்பர் 2021, 2:58 pm


திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், அப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடக்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலைமை பலருக்கும் ஏற்படுகிறது. அப்படி 35 ஆண்டுகள் காத்திருந்தவரின் காதல் கதைதான் இது.

கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர் சிக்கண்ணா. சிக்கண்ணா இளம் வயதில், தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஜெயம்மா என்பவரை நேசித்தார். வழக்கம் போல் ஜெயம்மா வீட்டினர், வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணமும் செய்து வைத்துவிட்டனர். அதிர்ந்து போன சிக்கண்ணா மனதுக்குள் அழுது தீர்த்தார்.

திருமணமான சில ஆண்டுகளில் ஜெயம்மாவுக்கு குழந்தைப் பேறு ஏற்படவில்லை. "குழந்தை பெறும் பாக்கியம் ஜெயம்மாவிற்கு இல்லை என்று சொல்லி பிறந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தது கணவரது குடும்பம்.

ஜெயம்மாவுக்கு நேர்ந்த துயரத்தை உணர்ந்த சிக்கண்ணா "திருமணம் செய்து கொள்ளலாம்' என்று நேசக்கரம் நீட்டினார். ஆனால் மறுமணம் செய்து கொள்வது தவறு என்று நினைத்து, ஜெயம்மா திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. சிக்கண்ணா துவண்டு போனார். அவர் மனம் முழுவதும் ஜெயம்மா வியாபித்து இருந்தார். ஜெயம்மாவின் நினைவில் சிக்கண்ணா ஆண்டுகளை ஓட்டினார்.

ஜெயம்மாவின் நினைவில் சிக்கண்ணா திருமணம் செய்து கொள்ளாமல் ஜெயம்மாவிற்காகக் காத்திருப்பதை உணர்ந்த சொந்தங்கள் "சிக்கண்ணாவைத் திருமணம் செய்து கொள்' என்று ஜெயம்மாவை வற்புறுத்தத் தொடங்கினர். சிக்கண்ணாவின் உண்மையான காதலைப் புரிந்து கொண்ட ஜெயம்மா, சிக்கண்ணாவைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார்.

சென்ற வாரம் சிக்கண்ணா - ஜெயம்மா திருமணம் எளிமையாக நடந்து முடிந்தது. ஜெயம்மாவின் கரம் பிடிக்க சிக்கண்ணா 35 ஆண்டுகள் காத்திருந்துள்ளார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.