நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

யார் விட்டுக்கொடுப்பது? 

வேதாத்திரி மகரிஷி சொற்பொழிவு ஒன்றில் இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி உறவின் சிறப்பைப் பற்றி பல உதாரணங்களுடன் பேசினார்.

News image
Updated On :14 பிப்ரவரி 2021, 6:00 am IST

வேதாத்திரி மகரிஷி சொற்பொழிவு ஒன்றில் இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி உறவின் சிறப்பைப் பற்றி பல உதாரணங்களுடன் பேசினார். இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளைப் பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து "விட்டுக் கொடுப்பது என்று பொதுவாகத்தான் சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்னை அங்குதான் ஆரம்பிக்கிறது' என்றார்.

அதற்கு வேதாத்திரி மகரிஷி "யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ? யார் அறிவாளியோ? அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள் தான் அனுசரித்து போவர்கள். அவர்கள் தான் பொறுத்துப் போவார்கள். இனி உங்கள் வீட்டில் யார் விட்டுக் கொடுத்துப் போவது என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்' என்றார்.

"உங்கள் அறிவுரை அமுதானது' என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் அந்த பெண்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.