மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கட்ட வண்டி... கட்ட வண்டி...

உழவுத் தொழிலுக்கும், கிராம மக்களின் போக்குவரத்துக்கும் பெருமளவில் பங்கு வகித்த கட்டை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்து விடைபெற்று வருகின்றன.

கட்ட வண்டி

Published On :

உழவுத் தொழிலுக்கும், கிராம மக்களின் போக்குவரத்துக்கும் பெருமளவில் பங்கு வகித்த கட்டை மாட்டு வண்டிகள் பயன்பாட்டில் இருந்து விடைபெற்று வருகின்றன. இதனால், இளையதலைமுறையினர் காண்பதற்கே அரிதாகிவிட்டது. இன்றும் கட்டை மாட்டு வண்டியை பயன்படுத்தி வரும் சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடி உமையாள்புரத்தைச் சேர்ந்த வீராசாமியிடம் பேசியபோது:

""அனைத்துத் துறையிலும் நவீன கருவிகள், இயந்திரங்கள், வாகனங்களின் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. நிலத்தை உழுதல், தண்ணீர் இரைத்தல், பயிர் நடவு செய்தல், களையெடுத்தல், கதிர் அறுவடை செய்தல், விளைபொருள்களை ஏற்றிச் செல்லுதல், கதிரடித்து துôற்றி தானியங்களைப் பிரித்தெடுத்தல், வைக்கோல் சுற்றுதல் உள்ளிட்ட வேளாண்மை சார்ந்த பணிகளுக்கும், விதவிதமாக கருவிகள், இயந்திரங்கள், வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.

இதனால், காளைகளையும், கட்டை மாட்டு வண்டிகளையும் வேளாண் சார்ந்த பணிகளுக்கு பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து போனது.

எனது கிராமத்தில் இருந்து தினம்தோறும் ஏத்தாப்பூர், புத்திரகவுண்டன்பாளையம் பகுதிக்கு, காளைகள் பூட்டிய கட்டை வண்டியில் விளைபொருள்களை ஏற்றிச் சென்று வருகிறேன்.

தற்போது கட்டை மாட்டு வண்டிகளை பழுது பார்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் கைதேர்ந்த தச்சர்கள் இல்லை.

இதனால் பராமரிப்பதற்கும் தொடர்ந்து பயன்படுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது.

விவசாயிகளின் தோழனான கட்டை மாட்டு வண்டிகளின் பயன்பாடு, வாகனங்கள் பரிணாம வளர்ச்சியில் இவற்றின் பங்கு குறித்து, குழந்தைகள் அறிந்து கொள்வதற்காகவாவது, கட்டை மாட்டு வண்டியை பயன்பாட்டில் இருந்து விடை பெறாமல் தொடர்ந்து பராமரித்து பாதுகாத்து பயன்படுத்தி வருகிறேன்'' என்கிறார் வீராசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.