இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்போரா...?

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு மிக முக்கியமான தகவல்களை அறிய வேண்டியது அவசியம்.

News image
தேசிய நெடுஞ்சாலை
Updated On :28 ஜூலை 2024, 11:51 am

ஏ.எஸ். கோவிந்தராஜன்

தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு மிக முக்கியமான தகவல்களை அறிய வேண்டியது அவசியம். சுங்கச்சாவடியில் கிடைக்கும் ரசீதில் என்னென்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதோ தெரிந்துகொள்ளுங்கள்.

சுங்கச் சாவடியில் பயணிக்கும்போது உங்கள் கார் திடீரென நின்றால், உங்கள் காரை இழுத்துச் செல்வதற்கும், சுமந்து செல்வதற்கும் சுங்கச்சாவடி நிறுவனமே பொறுப்பாகும்.

அதிவிரைவு நெடுஞ்சாலையில் உங்கள் காரில் பெட்ரோல் அல்லது பேட்டரி தீர்ந்துவிட்டால், உங்கள் காரை மாற்றுவதற்கும் பெட்ரோல், வெளிப்புற சார்ஜிங்கை வழங்குவதற்கும் கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் பொறுப்பாகும். நீங்கள் 1033-க்கு அழைக்கவும். பத்து நிமிடங்களில் உதவி செய்து 10 லிட்டர் பெட்ரோல் வரை இலவசம். கார் பஞ்சர் ஆனாலும், உதவிக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கார் விபத்துக்குள்ளானாலும் நீங்கள் அல்லது உங்களுடன் வரும் யாரேனும் முதலில் ரசீதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்.

 காரில் பயணம் செய்யும்போது ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டால், அந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும். அத்தகைய நேரத்தில் ஆம்புலன்ஸை உங்களுக்கு வழங்குவது சுங்கச்சாவடி நிறுவனங்களின் பொறுப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.