மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

DIN

கத்திரிக்காய் மிக்சட்

மசாலா பொரியல்

தேவையான பொருள்கள்:

நறுக்கிய கத்தரிக்காய், கோவைக்காய், கேரட், உருளைக்கிழங்கு- தலா கால் கிண்ணம்

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- 1 மேசைக் கரண்டி

மஞ்சள் தூள், சீரகம்- கால் தேக்கரண்டி

வறுத்து எடுக்க:

மிளகு, - அரை தேக்கரண்டி

கடுகு, சீரகம்- கால் தேக்கரண்டி

மிளகாய்- 4

தனியா- 2 தேக்கரண்டி

பட்டை- 1 துண்டு

செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ள பொருள்களை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து பொடிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு போட்டு தாளித்து அதில் அனைத்துக் காய்கறிகளையும் போடவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். காய்கள் முக்கால் பதம் வெந்ததும் அதில் வறுத்து அரைத்த பொடியை போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும்.

Story image

அஸ்பகரஸ் பட்டாணி புலாவ்

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி- 2 கிண்ணம்

அஸ்பகரஸ் (தண்டு வகை) , பச்சை பட்டாணி- தலா 1 கிண்ணம்

வெங்காயம்- 1

இஞ்சி, பூண்டு விழுது- 1 மேசைக்கரண்டி

சீரகம்- அரை தேக்கரண்டி

எண்ணெய்- 1 மேசைக்கரண்டி

தண்ணீர்- 2 கிண்ணம்

தேங்காய் பால்- 1 கிண்ணம்

பிரியாணி இலை- 1

உப்பு, கொத்துமல்லி- தேவையான அளவு

செய்முறை: அரிசியைக் கழுவி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து, தண்ணீரை வடித்து வைக்கவும். எண்ணெயைச் சூடாக்கி சீரகம் தாளிக்கவும். வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாடை போக வதக்கவும். அதில், அரிசி பிரியாணி இலை, தேங்காய்ப் பால், தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு பட்டாணி, நறுக்கிய அஸ்பகரஸ் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும், அரிசி வெந்ததும் பட்டாணி, அஸ்பகரஸ் கலவையை அதில் சேர்த்து உடையாமல் கிளறவும். கொத்துமல்லி இலையை சேர்த்து இறக்கவும்.

Story image

ஸாஃப்ராணி புலாவ்

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி - 2 கிண்ணம்

குங்குமப் பூ- 1 தேக்கரண்டி

முந்திரி, பாதம், பிஸ்தா, வால்நட் கலவை, உலர்ந்த திராட்சை- 1 கிண்ணம்

பைனாப்பிள், பப்பாளி, மாதுளை, திராட்சை, ஆப்பிள் கலவை- 1 கிண்ணம்

பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு- சிறிதளவு

கருப்பு சீரகம்- அரை தேக்கரண்டி

வறுத்த வெங்காயம்- அரை கிண்ணம்

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

கொத்துமல்லித் தழை,

புதினா- 1 கைப்பிடி

சர்க்கரை, தனியா, சீரகத் தூள்- தலா 1 மேசைக் கரண்டி

பால்- கால் கிண்ணம்

எண்ணெய்- 2 மேசைக்கரண்டி

நெய்- 1 மேசைக்கரண்டி

செய்முறை: அரிசியை களைந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும், வெங்காயத்தை நீள வாக்கில் வறுக்கவும். குங்குமப் பூவை பாலில் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளிக்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் சேர்த்து வறுக்கவும். உலர்ந்த திராட்சை சேர்த்து கருகாமல் வறுக்கவும். இஞ்சி- பூண்டு விழுது, சர்க்கரை, தனியா, சீரகத்தூள் சேர்த்து வதக்கவும், வதக்கிய வெங்காயம், பாலில் ஊறிய குங்கமப் பூவில் பாதி பொடியாக நறுக்கிய கொத்துமல்லி, புதினா சேர்த்து வேக வைக்கவும், அரிசி வெந்ததும் மீதமுள்ள குங்குமப் பூவை சேர்க்கவும். பழங்கள் கலவையை சேர்த்து சாதம் உடையாமல் கிளறவும். மேலே சிறிது நெய் விட்டு கொத்துமல்லி, குங்குமப் பூவால் அலங்கரிக்கவும்.

-லோ. சித்ரா, கிருஷ்ணகிரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.