திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

புதுப்பொலிவு...

வட சென்னையில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகரில், பராமரிப்பின்றி இருந்த பூங்காவை தனது சொந்த செலவில் புதுப்பித்துள்ளார் சமூக ஆர்வலர் சையத் அலிகான்.

News image
Updated On :19 ஜூலை 2025, 6:35 pm

ஆா்.ரங்கபாஷ்யம்

வட சென்னையில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகரில், பராமரிப்பின்றி இருந்த பூங்காவை தனது சொந்த செலவில் புதுப்பித்துள்ளார் சமூக ஆர்வலர் சையத் அலிகான்.

அவரிடம் பேசியபோது:

'வட சென்னையில் தொழிலாளர்கள், ஏழைகள், நடுத்தர மக்கள்தான் அதிகம் வசிக்கின்றனர். அதிலும், முத்தமிழ்நகர் வாசிகளும் அவ்வாறே உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாலும், அவர்களின் வாரிசுகளின் கல்வி இடைநிற்காமலும் இருக்க என்னால் முடிந்தளவுக்கு உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் மேற்கொண்டுவருகிறேன்.

Story image

முத்தமிழ் நகர் 4, 5- ஆவது பிளாக் பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில், கழிவுகள் நிறைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருந்தது. இந்தப் பூங்கா குழந்தைகள் விளையாடுவதற்கோ, பொதுமக்கள் நடைப் பயிற்சி, உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தது. அந்தப் பூங்காவை எனது சொந்த நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதுப்பித்துள்ளேன். தற்போது பூங்கா புதியதொரு பரிமாணம் பெற்றுள்ளது.

பூங்காவில் குழந்தைகளுக்கான உடற்பயிற்சி சாதனங்கள், நடைபாதைகள், முதியோருக்கான பயிற்சி உபகரணங்கள் உள்ளிட்ட நவீன அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளன. பூங்காவில் சிசி டிவி கேமிரா பொருத்தப்பட்டு, கண்காணிப்புப் பணியில் மேற்கொள்ளப்படுவதால், சமூக விரோதச் செயல்களும், தவறான நோக்கத்துக்காக வருவோரும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தப் பூங்காவின் பராமரிப்புக்காகவும், தொடர் மேம்பாட்டுக்காகவும் ஆண்டுதோறும் ரூ.1.50 லட்சம் செலவு செய்ய முடிவு செய்துள்ளேன்' என்கிறார் சையத் அலிகான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.