தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்
நாடகத் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர் பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள். நாடகத் தமிழின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய காரணத்தால், இவர் "நாடகத் தமிழின் தலைமையாசிரியர்' என்றே போற்றப்படுகிறார். நாடகக் கலைக்கு முதன் முதலில் புத்துயிர் ஊட்டியவரும் இவரே!










