மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அறியப்படாத அற்புதக் கவிஞர்

இராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் உள்ளது கரிவலம்வந்தநல்லூர். இது வரலாற்றுச் சிறப்புடைய சிற்றூர்.

News image
Updated On :14 பிப்ரவரி 2015, 9:30 pm

கொ.மா.கோதண்டம்

இராஜபாளையம் - சங்கரன்கோவில் சாலையில் உள்ளது கரிவலம்வந்தநல்லூர். இது வரலாற்றுச் சிறப்புடைய சிற்றூர். இந்த வட்டாரத்தில் தமிழ்ப் புலவர்கள் பலர் வாழ்ந்துள்ளனர். அவர்களுள் ஒருவர் சி.ஆ.ராமசாமிபிள்ளை. இவர் 1898-ஆம் ஆண்டு ஆடி மாதம் 14-ஆம் தேதி பிறந்தவர். சேத்தூர் அரசவைக் கவிஞர் அப்பாவுக் கவிராயரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர்.

 இராமசாமிபிள்ளை பஞ்சு வியாபாரம் செய்து வந்துள்ளார். அத்தொழில் சரியாக நடக்காமையால் வறுமையில் சிரமப்பட்டுள்ளார். அந்நிலையிலும் தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஈடுபாட்டோடு பல சிறு பிரபந்த நூல்களைப் படைத்துள்ளார். தாம் வாழ்ந்த கரிவலம்வந்தநல்லூர் கோயில் பால்வண்ணநாதர் மீது அந்தாதி, கலிவெண்பா, மாலை முதலிய பிரபந்த நூல்களை இயற்றியுள்ளார். இவருடைய நூல்கள் மரபிலக்கிய அமைப்பில் கவித்துவம் மிக்கவை.

இவர் இயற்றிய நூல்களாகக் கிடைப்பவை: திருக்கருவை முகலிங்க வெண்பா அந்தாதி, திருக்கருவை பால்வண்ணத்தந்தாதி, திருக்கருவை நீரோட்டக வெண்பா அந்தாதி, கருவை நாயகமாலை, திருக்கருவை வருக்கமாலை, திருக்கருவை இரட்டை மணிமாலை, திருக்கருவை பால்வண்ணப்பத்து, திருக்கருவை ஒப்பனையம்மன் வருகைப்பத்து, திருக்கருவை ஒப்பிலா வல்லியம்மன் பத்து, திருக்கருவை முப்பிடாதியம்மன் பத்து, திருக்கருவை வீரசண்முகர் வருக்கச் சமயமாலை, திருக்கருவை வீரசண்முகர் வாழ்த்துப் பாமாலை, திருக்கருவை தலபுராண போற்றிக் கலிவெண்பா.

சொல்நயமும், நடையழகும் மிக்க பாடல்களைப் பாடியவர் ராமசாமிபிள்ளை. இவர் இயற்றிய முகலிங்க வெண்பா அந்தாதி பாடல் ஒன்று.

""கண்ணே கருத்தே கதிகாணு மெய்த்தவத்தோர்

எண்ணே எழுத்தே யிறைவனே - நண்ணுந்

தவத்தால் உடல்வருந்தேன் சத்கருமஞ் செய்யேன்

அவத்தானே னுய்யு வதெவ் வாறு?''

என்று பாடியுள்ளார். இவர் 1968-ஆம் ஆண்டு தம் 70ஆவது வயதில் காலமானார். இலக்கிய உலகம் கண்டுகொள்ளாத இனிய கவிஞரான சி.ஆ.ராமசாமிபிள்ளை பக்தி இலக்கியத்திற்கும் பிரபந்த இலக்கியத்திற்கும் வழங்கிய கொடை அளப்பரியது. இப்புலவரின் குடும்பத்தார் இன்றும் கரிவலம் வந்தநல்லூரில் வாழ்ந்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.