மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பெயர் சுருங்கியது 

தமிழில் சிற்றிலக்கியங்கள் படைத்த கவிஞர்களுள் குமரகுருபர சுவாமிகள் குறிப்பிடத்தக்கவர். "நான் திருவாரூர் என்னும் ஊரை நெருங்கினேன்; என் பெயர் சுருங்கிவிட்டது' என்கிறார்.

News image
Updated On :10 மார்ச் 2018, 9:02 pm

பனசை மு. சுவாமிநாதன்

தமிழில் சிற்றிலக்கியங்கள் படைத்த கவிஞர்களுள் குமரகுருபர 
சுவாமிகள் குறிப்பிடத்தக்கவர். "நான் திருவாரூர் 
என்னும் ஊரை நெருங்கினேன்; என் பெயர் சுருங்கிவிட்டது' என்கிறார்.
மேலோட்டமாகப் பார்த்தால் இதன் மெய்ப்பொருள் விளங்காது.

தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிகரின் சீடர்தான் குமரகுருபரர். அவர் தன் குருநாதரைப் பார்க்க அவர் இருக்கும் திருவாரூர் செல்கிறார். ஊர் எல்லை வந்ததும் தன் பெயர் சுருங்கி விட்டது என்கிறார். "சீவன்' என்னும் நிலையில் உள்ள சீடன், குருநாதர் இருக்கும் ஊர் எல்லையை அடைந்ததும் "சிவன்' ஆகிய தன் தன்மையை அடைந்துவிட்டது என்பதையே அதாவது, சீவன் சிவனாகிவிட்டது என்பதையே இவ்வாறு சூட்சுமமாகக் குறிப்பிட்டுள்ளார்.

சீவன் என்பதில் "சீ' என்ற நெட்டெழுத்துக்கு 2 மாத்திரை அளவு. சிவன் என்பதில் "சி' என்ற குறிலுக்கு 1 மாத்திரை அளவு. இதையே சிலேடை நயம்பட,

"நற் கமலை ஊரில் குறுகினேன்
ஒரு மாத்திரை அளவு பேரில் குறுகினேன்' 

என்று, "சீவன்', "சிவன்' ஆனதையே "பேர் சுருங்கியது' என்று பாடியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.