மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

அரசாணையை நிறைவேற்றல்

வெற்றிச் சிறப்புடைய வேலை உடைய அரசன் ஓர் ஆணையைப் பிறப்பித்தால், யாம் ஒன்றும் அதனால் பெற்றிலேம் என்று சொல்வது அறியாமையே ஆகும்.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 2:47 pm

பழமொழி நானூறு
 வெற்றிவேல் வேந்தன் வியங்கொண்டால் யாமொன்றும்
 பெற்றிலே மென்பது பேதைமையே - மற்றதனை
 எவ்வ மிலராகிச் செய்க அதுவன்றோ
 செய்கென்றான் உண்கென்று மாறு. (பா.181)
 வெற்றிச் சிறப்புடைய வேலை உடைய அரசன் ஓர் ஆணையைப் பிறப்பித்தால், யாம் ஒன்றும் அதனால் பெற்றிலேம் என்று சொல்வது அறியாமையே ஆகும். அவன் ஏவலை எவ்விதக் குறைபாடும் இல்லாமல் உடனே செய்து முடிக்க வேண்டும். அதுவல்லவோ, "செய்க' என்றவன், பின் "உண்க' என்று உபசரிக்கச் செய்யும் வழியாகும். செயலுக்கு ஏவியவன், அது முடிந்ததும், பாராட்டிப் பரிசு தராமல் போவதில்லை என்பது கருத்து. "செய்கென்றான் உண்கென்று மாறு' என்பது பழமொழி.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.