தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

 அச்சம் வேண்டாம்

மதில் வாயிலை அடைத்துவைத்துப் பாதுகாவல் பெற்றுள்ளே யிருப்பினும் போருக்காற்றாது அஞ்சி உட்புகுந்தார் அச்சத்தான் பகைவர் கையுட்படுவர்.

News image
Updated On :14 ஜூன் 2020, 6:35 am

பழமொழி நானூறு
 இஞ்சி அடைத்துவைத் தேமாந் திருப்பினும்
 அஞ்சி அகப்படுவார் ஆற்றாதார் - அஞ்சி
 இருள்புக் கிருப்பினும் வெய்யே வெரூஉம்புள்
 இருளி னிருந்தும் வெளி. (பாடல்-154)
 மதில் வாயிலை அடைத்துவைத்துப் பாதுகாவல் பெற்றுள்ளே யிருப்பினும் போருக்காற்றாது அஞ்சி உட்புகுந்தார் அச்சத்தான் பகைவர் கையுட்படுவர். பயந்து இருளின்கண் புகுந்திருந்ததாயினும் பறவையானது உண்மையாகவே இருளினை உடைய இரவாக இருந்தும் வெளிச்சமுடைய பகலாக நினைத்து அஞ்சும். (க-து.) அஞ்சுவார்க்கு அரணாற் பயனுண்டாத லில்லை. "அஞ்சி இருள்புக் கிருப்பினும் வெய்யே வெரூஉம் புள் இருளின் இருந்தும் வெளி' என்பது பழமொழி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.