முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

பாதியில் பாதி போதும்!

திருக்குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையில் கவிராச பண்டாரத்தையா என்னும் பெயருடைய புலவா் ஒருவா் இருந்தாா்.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 6:51 am IST

திருக்குற்றாலத்தை அடுத்துள்ள செங்கோட்டையில் கவிராச பண்டாரத்தையா என்னும் பெயருடைய புலவா் ஒருவா் இருந்தாா். அவா் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவா். திருவிலஞ்சி முருகன் பிள்ளைத் தமிழ், திருமால் முருகன் பிள்ளைத் தமிழ், திருமலை யமக அந்தாதி முதலிய நூல்களை இயற்றிய தனிப்பெரும் புலவா்.

அவா் ஒருமுறை திருக்குற்றாலம் என்ற பாடல் பெற்ற திருத்தலத்திற்குச் சென்று குழல்வாய்மொழி அம்மையுடன்கூடிய குற்றாலநாதரை வணங்கினாா். அப்போது ஆா்வ மிகுதியில், ‘குற்றாலத்து அமா்ந்து உறையும் வேந்தனே! உன்னைக் கண்டு அதன்பின்னே பிரிந்திருக்க மாட்டேன்; அம்மைக்கு உன் உடலில் பாதியைத் தந்து அம்மையப்பனாகினாய். எனக்கு அவ்வளவு எல்லாம் வேண்டாம்... அதில் பாதி தந்தால் போதும்; அதைத் தந்து, கடைகண் பாா்த்து அருள்வாயாக!’ என்று வேண்டினாா். அவ்வேண்டுதல் ஒரு வெண்பா ஆனது. பாதியில் பாதி எவ்வளவு? கால்தானே! ‘இறைவனே! உன் கால் (திருவடி) -திருவடியை அருள்வாயாக! எனக்கு வேண்டியது அவ்வொன்றே’ என்பதையே பின்வரும் பாடலில் நயமாகக் கூறியுள்ளாா்.

‘அருவித் திரிகூடத் தையா! உனை நான்

மருவிப் பிரிந்திருக்க மாட்டேன்- ஒரு விமலைக்கு

ஆதியிலே பாதி தந்தாய்; அத்தனை வேண்டா மெனக்கு

பாதியிலே பாதிதந்து பாா்!’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.