மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

இறப்ப எமக்கீ திழிவரவென்று எண்ணார்பிறப்பிற் சிறியாரைச் சென்று - பிறப்பினால்

News image
Updated On :18 ஏப்ரல் 2021, 1:18 pm

தினமணி


இறப்ப எமக்கீ திழிவரவென்று எண்ணார்
பிறப்பிற் சிறியாரைச் சென்று - பிறப்பினால்
சாலவும் மிக்கவர் சார்ந்தடைந்து வாழ்பவே
தால வடைக்கலமே போன்று. (பாடல்-198)

குடிப்பிறப்பினாலே மிகுதியும் சிறந்தவர்களான சிலர் தம் வறுமை காரணமாகக் குடிப்பிறப்பிலே மிகவும் தாழ்ந்தவர்களைச் சென்றடைந்து வாழ்கின்றனர். "எமக்கு இச்செயல் மிகவும் இழிவைத் தருவதாகுமே' என்றும் எண்ணாதிருக்கிறார்கள். அவர்கள் நிலைமை, அடைமானம் வைத்த நிலம்போல் ஒளி மழுங்கியதாகவே இருக்கும். "தால வடைக்கலமே போன்று' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.