மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்தம்மைப் பிரியார் தமரா யடைந்தாரின்செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 3:55 pm

தினமணி

இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்
தம்மைப் பிரியார் தமரா யடைந்தாரின்
செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?
மைம்மைப்பின் நன்று குருடு (பாடல்-188)

இம்மையில் ஏற்படும் பழிச் சொல்லையும், மறுமையில் அனுபவிக்க வேண்டியதான பாவத்தையும் நினைத்து, தம்மைவிட்டு நீங்காதவராக, உட்பகை கொண்டு உறவினர்போல வாழ்ந்தவரின்பால், அதனை உணர்ந்தவர், தாமும் செம்மையாகப் பகையினை மேற்கொண்டு அவர்பால் சேராது ஒதுங்கி இருப்பவர்கள் கெட்டவர்களோ? அன்று; அவர்களே அறிவுடையவர்கள். மாய்மாலம் செய்யும் கண்ணாக இருப்பதைவிட குடுட்டுக் கண்ணே பெரிதும் நன்மையாகும். "மைம்மைப்பின் நன்று குருடு' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.