கற்றாற்று வாரைக் கறுப்பித்துக் கல்லாதார்
சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் - எற்றெனின்
தானும் நடவான் முடவன் பிடிப்பூணி
யானையோ டாடல் உறவு. (பாடல்- 192)
கற்று வல்லவர்களான பெரியோரைச் சினங்கொள்ளச் செய்து கல்லாதவர்கள் சொற்களைக் கொழித்துக்கொண்டு மனவெழுச்சியுடன் எழுதல் எதுபோன்ற தென்றால், தானும் நடக்காத முடவன் ஒருவன், தன்னுடைய பிடிப்பை ஊணிக்கொண்டு சென்று, யானையோடு உறவாடுதலைப் போன்றதாகும். "முடவன் பிடிப்பூணியானையோ டாடல் உறவு' என்பது பழமொழி.