மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அடக்கம் இல்லாதவனாகிய ஒருவன் நடத்தையிலும் தூய்மை இல்லாதவனாகவே இருப்பான். உடைமையாகிய பெரும் செல்வத்தால் வரும் உயர்ந்த சிறப்புகளை எல்லாம் அத்தகைய ஒருவன்பால் வைப்பது தகாது.

News image
Updated On :2 மே 2021, 1:42 pm

தினமணி


உடைப்பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை
அடப்பமில் உள்ளத்தன் ஆகி - நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல், குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல். (பாடல்-200)

அடக்கம் இல்லாதவனாகிய ஒருவன் நடத்தையிலும் தூய்மை இல்லாதவனாகவே இருப்பான். உடைமையாகிய பெரும் செல்வத்தால் வரும் உயர்ந்த சிறப்புகளை எல்லாம் அத்தகைய ஒருவன்பால் வைப்பது தகாது. அது குரங்கின் கையிலே கொள்ளியைக் கொடுத்து அனுப்புவது போன்ற அறியாமையான செயலாகும். "குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.