மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

வாய்ப்பதற்கு அரியதான ஓர் இடத்தினுள்ளே, முதலில் ஒருவன் இருப்பதற்கு இடம் பெற்றுவிட்டான் என்றால் அடுத்து, அவன் படுப்பதற்கான இடத்தையும் அங்கேயே பெற்றுவிடுவான்.

News image
Updated On :1 ஜனவரி 2022, 6:30 pm

தினமணி

சிறிதாய கூழ்பெற்றுச் செல்வரைச் சேர்ந்தார்
பெரிதாய கூழும் பெறுவர்-அரிதாம் 
இடத்துள் ஒருவன் இருப்புழிப் பெற்றால் 
கிடப்புழியும் பெற்று விடும். (பாடல்-235)


வாய்ப்பதற்கு அரியதான ஓர் இடத்தினுள்ளே, முதலில் ஒருவன் இருப்பதற்கு இடம் பெற்றுவிட்டான் என்றால் அடுத்து, அவன் படுப்பதற்கான இடத்தையும் அங்கேயே பெற்றுவிடுவான். அதுபோலவே, முதலில் சிறிதளவான ஊதியம் பெற்று, செல்வரைச் சேர்ந்தவர்கள், விரைவிலே பெரிதளவான ஊதியத்தையும் அவரிடமிருந்து பெறுவார்கள். "இருப்புழிப் பெற்றால் கிடப்புழியும் பெற்று விடும்' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.