வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

இனிய சாயலையும், மெலிந்த இடையையும் உடைய பெண்ணே! ஒருவர் மிகப்பெரிய அளவில் செல்வத்தைப் பெற நேர்ந்தால், அச்செல்வம் சிறக்க மற்றவர்க்கும் கொடுத்து உவக்க வேண்டும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:43 pm

தினமணி

மல்லல் பெருஞ் செல்வம் மாண்டவர் பெற்றக்கால்,
செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம், மெல் இயல்,
சென்று ஓசிந்து ஓல்கு நுசுப்பினாய்! பைங் கரும்பு
மென்றிருந்து, பாகு செயல்.     (பாடல்: 289)

இனிய சாயலையும், மெலிந்த இடையையும் உடைய பெண்ணே! ஒருவர் மிகப்பெரிய அளவில் செல்வத்தைப் பெற நேர்ந்தால், அச்செல்வம் சிறக்க மற்றவர்க்கும் கொடுத்து உவக்க வேண்டும். அதுவே செல்லும் வழியைச் சேம வழியாக்கும். அச்செயல் பச்சைக் கரும்பைக் கடித்துச் சுவைப்பதுடன் அதனைப் பாகாக்கிச் சுவைப்பதற்கு நிகராகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.