அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மனித நேயத்தின் அச்சாணி!

""நேர்மையே சிறந்த கொள்கை'' என்பர் பெரியோர். மனிதர்கள் அனைவரும் நேர்மையாகவும், உண்மையாளராகவும் வாழ்ந்தால் போட்டி, பொறாமை, பேராசை முதலிய தீய குணங்களுக்கு இடமே இல்லை எனலாம்.பண்டைய நாளில் நடந்த உண்மை சம்ப

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:54 am

ஜி. அஹ்மது

""நேர்மையே சிறந்த கொள்கை'' என்பர் பெரியோர். மனிதர்கள் அனைவரும் நேர்மையாகவும், உண்மையாளராகவும் வாழ்ந்தால் போட்டி, பொறாமை, பேராசை முதலிய தீய குணங்களுக்கு இடமே இல்லை எனலாம்.பண்டைய நாளில் நடந்த உண்மை சம்பவம் ஒன்றினை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக நபி மொழி நூலில் கூறப்பட்டுள்ளது.

பனூ இஸ்ராயீல் என்ற கூட்டத்தாரில் ஒருவர், மற்றொருவரிடம் நிலம் ஒன்றினை விலைக்கு வாங்கினார். அந்நிலத்தைப் பயிரிட மண்ணைத் தோண்டும்போது, ஒரு தங்கப் பெட்டகத்தைக் கண்டெடுத்தார். நிலம் விற்றவரிடம் சென்று, ""நான் உங்களிடம் நிலத்தை மட்டுமே விலைக்கு வாங்கினேன். அதில், ஒரு தங்கப் பெட்டகத்தைக் கண்டெடுத்தேன். அதை நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்'' எனக் கூறி அதை ஒப்படைத்தார்.

நிலத்தை விற்றவரோ, இதை ஒப்புக்கொள்ளவில்லை. ""நான் உங்களுக்கு நிலத்தையும், அதில் உள்ள அனைத்தையும் சேர்த்துத்தான் விற்றேன். எனவே, நீங்கள்தான் இப்பெட்டகத்திற்கும் உரிமையாளர்'' எனக் கூறினார்.

நிலத்தை வாங்கியவரோ, அந்தப் பெட்டகத்தை வாங்க மறுத்துவிட்டார். அவ்வூரிலுள்ள சான்றோர் ஒருவரிடம் இவ்வழக்கு சென்றது. இந்த அதிசய வழக்கைக் கேட்டு, அவரே ஒரு கணம் திகைத்துவிட்டார்.

""உங்கள் இருவருக்கும் வாரிசுகள் உள்ளனரா?'' என சான்றோர்

கேட்டார்.

""ஆம்! எனக்கு ஒரு பெண் இருக்கிறாள். மணப்பருவம் எய்தியவள்'' என நிலத்தை விற்றவர் கூறினார்.

நிலத்தை வாங்கியவர், ""மணமுடித்துக் கொடுக்க வேண்டிய வயதில் எனக்கு ஒரு மகன் இருக்கிறான்'' என்றார்.

இருவர் கூற்றையும் கேட்ட சான்றோர், ""உம்முடைய மகளை அவருடைய மகனுக்குத் திருமணம் செய்து கொடுத்து, அந்தத் தங்கப் பெட்டகத்தை மணமக்களுக்கு அன்பளிப்பாக வழங்கி விடுங்கள்'' என்று தீர்ப்பு வழங்கினார்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா. நூல்: புகாரி/முஸ்லீம்).

""இறைவன் உங்கள் உள்ளங்களையோ, செல்வங்களையோ பார்ப்பதில்லை. உங்கள் இதயத்திலுள்ள எண்ணங்களையும், வெளிப்படையான செயல்களையும் மட்டுமே பார்க்கின்றான்'' என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்பர் முன்னோர். மற்றவர்களுடைய பொருள்களுக்கு ஆசைப்படாத உயர்ந்த குணமே சாலச் சிறந்தது. தூய்மையான எண்ணமுடையோர்கள் ஒருபோதும் நிலை பிறழ மாட்டார்கள். எனவே மனிதப் பண்புகளே மனித நேயத்துக்கு அச்சாணியாகும் எனலாம்.

மனிதப் பண்புகளை பயின்று வாழ்ந்தால் உலகம் புனிதமாகும். மனித நேயம் மலரும். சகோதரத்துவம் ஓங்கி சண்டைகள் ஒழியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.