தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வாழ்வில் ஒளி ஏற்றுபவனுக்கு ஆயிரம் தீப வழிபாடு

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில், அரங்கநாதர் கோயிலுடன் இணைந்து புகழ்பெற்று விளங்குகிறது ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மர் திருக்கோயில்.

News image
Updated On :14 நவம்பர் 2013, 10:00 am

ஸ்ரீஸ்ரீ

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில், அரங்கநாதர் கோயிலுடன் இணைந்து புகழ்பெற்று விளங்குகிறது ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மர் திருக்கோயில். காட்டழகிய சிங்கர் என்னும் திருநாமத்துடன்   இங்கே மிகப் பெரிய உருவில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார் ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மர்.

ஸ்ரீரங்கம் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ.   தொலைவு சென்றால் இந்தக் கோயிலை

அடையலாம்.

நூற்றாண்டுகளுக்கு முன்னர்... அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்த இடம். இங்கே யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி, அடிக்கடி மக்களுக்கு பெரும் நெருக்கடியைத்   தந்தனவாம். அப்போது, யானைகளின் தொல்லையில் இருந்து தன் எல்லை மக்களைப் பாதுகாக்க, பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன்,   லக்ஷ்மி நரஸிம்மப் பெருமாளை இங்கே எழுந்தருளச் செய்து, கோவிலும் கட்டுவித்தான். அப்படி உருப்பெற்ற இந்தக் கோவிலை கி.பி.1297ல், வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்   புனரமைத்தான். இங்கே சந்நிதி கருவறையில், மஹாலக்ஷ்மியை மடியில் இருத்தி, ஆலிங்கனம் செய்த கோலத்தில் லக்ஷ்மி நரஸிம்ஹராக காட்டழகிய சிங்கப் பெருமானை தரிசிக்கலாம். சுமார் 8 அடி   உயரம். திருத்தமான அமைப்பு. வெள்ளியில் அமைந்த பற்கள் அமைப்பு நரஸிம்ஹப் பெருமானின் தத்ரூப தரிசனத்தை மனக்கண்முன் நிறுத்தும்.

சிறப்பு மிகுந்த இந்தக் கோயிலில் 12வது ஆண்டாக, நவ.17 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு சஹஸ்ர தீப வழிபாடு நடைபெறுகிறது. மாருதி நண்பர்கள் குழுவினரின் ஏற்பாட்டில், ஞானநாயகன் என்ற   தலைப்பில் நாகை முகுந்தனின் உபந்யாசமும் நடைபெறுகிறது. இருள் கவிந்த இடமாகத் திகழ்ந்த இந்தக் கோயிலைச் சுற்றி ஒளிவெள்ளம் பரவும் காட்சி கண்கொள்ளாக் காட்சிதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.