எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

புஷ்கரில் பிரம்மாவின் திருக்கோயில்!

அடிமுடி காண முடியாத சிவனிடம் முடியைக் கண்டதாகப் பொய் சொன்ன பிரம்மாவிற்கு கோயிலே இருக்கக் கூடாது என்று சிவன் சாபமிட்டார்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 12:22 pm IST

அடிமுடி காண முடியாத சிவனிடம் முடியைக் கண்டதாகப் பொய் சொன்ன பிரம்மாவிற்கு கோயிலே இருக்கக் கூடாது என்று சிவன் சாபமிட்டார்.

அதனால் மிகவும் கலங்கிப்போன பிரம்மா மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன் தனக்கும் பூமியில் ஒரு கோயில் வேண்டும் என்று வேண்டினார். சிவன் மனமிரங்கி ஒரு தாமரை மலரை பிரம்மாவிடம் கொடுத்து, "போகும் இடமெல்லாம் கையில் கொண்டு போகும்படியும் பூ எங்கு கரத்திலிருந்து விழுகிறதோ அங்கு உனக்கு கோயில் உண்டாகும்' என்று ஆசி அருளினார். பிரம்மா தாமரையை கையில் ஏந்தி பல்வேறு இடங்களில் சுற்றி வந்தார். ஓரிடத்தில் பூ கரத்திலிருந்து விழுந்தது. பூ விழுந்த அந்த இடமே புஷ்கர் (புஷ்- புஷ்பம்) (கரம் -கை) ஆயிற்று.

ராஜஸ்தான் மாநிலம், ஆஜ்மிருக்கு 12 கி.மீ தூரத்தில் உள்ளது புஷ்கர். இங்கு பிரம்ம சரோவர் ஏரி உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் இதில் ஐக்கியமாகி இருப்பதாக ஐதீகம். தண்ணீரும் கரும்பச்சை, இளம் பச்சை, வெண்மை நிறமாக இருக்கும். இங்கு பித்ரு காரியங்கள் செய்வார்கள்.

ஏரியில் இறைவன் உறைந்திருப்பதாகக் கருதப்படுவதால் அதில் யாரும் ஸ்நானம் செய்யக்கூடாது. ஆனால் படித்துறையில் அமர்ந்து தண்ணீரை மொண்டு குளிக்கலாம் என்பார்கள்.

பிரம்மா யாகம் செய்ய எண்ணினார். மனைவி உடன் இல்லாதபோது செய்யக்கூடாது என்று, மானச புத்திரரான நாரதரை தேவலோகம் அனுப்பி சாவித்திரி தேவியை அழைத்து வரச் சொன்னார். சாவித்திரி தேவி வரத்தாமதமானதால், தானே ஒரு பெண்ணை சிருஷ்டித்து யாகத்தை முடித்தார். சாவித்திரி தேவி தன் கணவருடன் வேறு ஒருபெண் இருப்பதைக் கண்டு கோபம் கொண்டு "பிரம்மாவிற்குப் பூலோகத்தில் கோயிலே இருக்கக் கூடாது' என்று சாபம் இட்டதாகவும் தேவர்கள் வேண்டிக் கொண்டதால் புஷ்கரில் மட்டும் கோயில் அமைந்திருக்க அனுமதித்தார் என்பதும் செவி வழித் தகவல். இங்குப் பிரம்மாவிற்கு அருகில் காயத்திரி தேவி வீற்றிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.