பாகிஸ்தானுக்கு ஒரு வாரத்தில் திரும்புவேன், பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதியும், அந்நாட்டு முன்னாள் அதிபருமான முஷாரஃப் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி, வெளிநாட்டில் வசித்து வருகிறார். அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார் என பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனிடையே விரைவில் பாகிஸ்தான் திரும்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து துபையில் அவர் மேலும் கூறியது: முன்னாள் பிரதமர் பேநசீர் புட்டோ கொலை வழக்கு தொடர்பாக என்னைக் கைது செய்வதாக பாகிஸ்தான் அரசு கூறி வருகிறது. ஆனால் என்ன காரணத்துக்காக என்பது எனக்குத் தெரியவில்லை.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான தற்போதைய அரசின் பதவிக்காலம் வரும் 16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. மே மாதத்தில் நடைபெறவுள்ள தேர்தலைக் கண்காணிக்க இடைக்கால அரசை அமைக்கும் முயற்சியில் ஆளும் கட்சியும்,எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. நான் ஒரு வாரத்துக்குள் பாகிஸ்தான் திரும்புவேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்

ஆசிய மல்யுத்தம்: மீனாட்சிக்கு வெள்ளி

மங்கோலியாவை முழுமையாக வென்றது இந்தியா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

