ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இலங்கை நிராகரித்துள்ளது.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிஸ் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறியது: இந்திய ஆதரவுடன் அமெரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பின்விளைவைத் தான் ஏற்படுத்தும். இலங்கை மேற்கொண்ட நல்ல செயல்கள் குறித்து எதுவும் தீர்மானத்தில் குறிப்பிடப்படவில்லை.
இலங்கை அமைச்சரவையின் செய்தித்தொடர்பாளர் கேஹிலியா ரம்புவெல்லா கூறியதாவது:
அமெரிக்கா தீர்மானத்தில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை இலங்கை அரசு நிராகரிக்கிறது. உள்நாட்டு அரசியல் காரணங்களால் இந்தியா இத்தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளது.
இந்தியாவுடனான நல்லுறவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அந்நாட்டு மத்திய அமைச்சர் சிதம்பரமும் இலங்கையை எதிரி நாடாக கருதவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை முற்றிலும் இலங்கை அரசு நிராகரிக்கிறது. போருக்கு பிந்தைய காலகட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தீர்மானத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இலங்கைக்கு எதிராக தடைகளோ, தலைவர்கள் பயணத்துக்கு தடையோ விதிக்கப்படவில்லை. சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வரும் 2016-ம் ஆண்டு வரை இலங்கை அரசுக்கு காலஅவகாசம் உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம் விளாசல்; ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றுமா வங்கதேசம்?

இந்த வாரம் கலாரசிகன் - 14-06-2026

அணிலாடும் முன்றில்

நீத்தார் - பெரியார் - நல்லோர்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


